Saturday, August 23, 2014

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் தக்காளியானது உடலுக்கு நன்மைகளை தருவதுடன், சருமத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்....

தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

சிறந்த ஆன்டி-செப்டிக் பொருள்....

உங்களுக்கு தெரியுமா? கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்பட்டால், அப்போது பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட இடத்தில் வைத்தால், சிறந்த ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.

சரும கருமையை போக்கும்.....

வெளியே வெயிலில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஒரு தக்காளி துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கும்.

சிறுநீரகக் கற்களை கரைக்கும்...

தக்காளியில் உள்ள நிக்கோட்டின் ஆசிட், பித்தக் கல் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவியாக இருக்கும்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும்....

கோடையில் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. ஏனெனில் அவை உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.

செரிமானத்தை அதிகரிக்கும்....

தக்காளியை உட்கொண்டால், அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைய உதவிப்புரியும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்....

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளியை சேர்த்து வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம். ஏனெனில் தங்ககாளியில் சோடியம் குறைவாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி புரிகிறது.

பசியின்மையைத் தடுக்கும்....

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் நல்லது. ஏனெனில் அதனை குடித்து வந்தால், அவை பசியை தூண்டும் நொதிகளை உற்பத்தி செய்யும். அதிலும் தினமும் ஒரு தக்காளியை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

கண்களுக்கு நல்லது....

தக்காளியில் பீட்டா-கரோட்டின் அடங்கியுள்ளதால், இவை பார்வை கோளாறு ஏற்படுவதை தடுத்து, ஆரோக்கியமான பார்வையைக் கொடுக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோயை குறைக்கும் ....

ஆண்கள் தினமும் ஒரு தக்காளியை உட்கொண்டு வந்தால், 20 சதவீதம் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.

முகப்பருக்களை எதிர்க்கும்....

தக்காளியில் சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி உள்ளது. எனவே தினமும் இதன் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன், அதனால் ஏற்படும் தழும்புகளையும் தடுக்கலாம்.

இதயத்திற்கு மிகவும் சிறந்தது....

தக்காளியில் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால், இவை இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, இரத்த நாளங்களை பாதுகாக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது....

தக்காளியில் உள்ள வைட்டமின் பி1, சர்க்கரையை எனர்ஜியாக மாற்றக்கூடியவை. எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை எடுத்து வருவது நல்லது.

உடலை சுத்தப்படுத்தும்.....

புகைப்பிடிப்பவர்கள், தினமும் தக்காளி சூப் குடித்து வந்தால், அதில் உள்ள குளோரோஜெனிக் மற்றும் கொமாரிக் ஆசிட், உடலில் தங்கியுள்ள புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்தும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்....

தக்காளிக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. மேலும் இது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சீராக பராமரிக்கும்.

தசைப் பிடிப்புக்களுக்கு நிவாரணம் அளிக்கும்...

தசைகளின் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய பாஸ்பரஸ் தக்காளியில் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால், தசைப் பிடிப்புக்கள் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்த சோகையை குணமாக்கும்...

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஒன்றாக சேர்ந்து இருக்கும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும் ...

தக்காளியிலும் கால்சியம் நிறைந்துள்ளதால், இதனை உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவுடன் இருக்கும்.

சிறந்த வலி நிவாரணி....

தக்காளி மிகவும் சிறந்த ஒரு இயற்கையான வலி நிவாரணி. ஏனென்றால் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருக்கிறது. மேலும் நாள்பட்ட வலிகளான ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் இதனை எடுத்து வருவது மிகவும் நல்லது.

எடையை குறைக்கும்....

தக்காளியில் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் சூப் போட்டு ஒரு கப் குடித்து வந்தால், எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

முதுமையைத் தடுக்கும்....

தக்காளி உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பதை தவிர்த்து, அழகை வழங்குவதிலும் முதன்மையாக உள்ளது. எப்படியெனில் தக்காளியை உணவில் சேர்த்து வந்தாலும் சரி, அதன் சாற்றினை சருமத்தில் தடவி வந்தாலும் சரி, இது விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கும்.

பதினாறு செல்வங்கள்:

பதினாறு செல்வங்கள்:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?
அதன் விளக்கம் பின்வருமாறு:-
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர். உண்மைதானே?
பதினாறு செல்வங்கள்:

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?
அதன் விளக்கம் பின்வருமாறு:-

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர். உண்மைதானே?

Friday, August 22, 2014

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..
காதைக் கிட்ட கொண்டு வாங்க!




இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும், எப்பேர்பட்டவர்கள் என்றும் சொல்வார்கள். உதாரணமாக, நாக்கில் மச்சம் இருந்தால், அவர்கள் நிறைய பொய் சொல்வார்கள் என்றும், எது சொன்னாலும் நடக்கும் என்று சொல்வார்கள்.


இதுப் போன்று நிறைய உள்ளன. இப்போது அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதிலும் எந்த இடத்தில் மச்சம் இருந்தால், எப்பேர்பட்டவர்கள், எப்படி இருப்பார்கள் என்பதையும் தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!


நெற்றியின் வலது பக்கத்தில் இருந்தால்


வலது பக்க நெற்றியில் மச்சம் இருந்தால், எப்போதும் செல்வ வளத்துடன் இருப்பார்கள் என்று அர்த்தம்.


நெற்றியின் இடது பக்கத்தில் இருந்தால்


வலது பக்கத்திற்கு அப்படியே எதிராக, மச்சமானது இடது பக்கத்தில் இருப்பவர்கள் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.


நெற்றியின் நடுவே இருந்தால்


நெற்றியின் நடுவில் இருந்தால், செல்வத்துடன், நல்ல புகழ் மிக்கவராக இருப்போம்.


தாடையில் இருந்தால்


மச்சமானது தாடையில் இருந்தால், எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள், எப்போதும் துணையுடன் சண்டை போடுவார்கள்.


வலது கண்ணுக்கு மேலே இருந்தால்...


வலது கண்ணுக்கு மேலே மச்சம் இருந்தால், வாழ்க்கை துணையிடம் இருந்து அதிகப்படியான அன்பை பெறுவார்கள்.


இடது கண்ணுக்கு மேலே இருந்தால்

மச்சமானது இடது கண்ணுக்கு மேலே இருந்தால், எதுவும் எளிதில் கிடைக்காது, போராடி தான் பெறுவார்கள்.


கன்னத்தில் மச்சம் இருந்தால்


கன்னத்தில் வலது பக்கத்தில் இருந்தால், நல்ல செல்வ வளத்துன் இருப்பார்கள். அதுவே இடது கன்னத்தில் இருந்தால், சற்று கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.


உதடுகளில் மச்சம் இருந்தால்


உதடுகளில் மச்சம் இருந்தால், அந்த விசயத்தில் (இரவு வாழ்க்கை) விஷயத்தில் வல்லவராக இருப்பார்கள் என்று அர்த்தம்.


காதுகளில் மச்சம் இருந்தால்


வலது காதில் மச்சம் இருந்தால், குறைந்த வாழ்நாள் உடையவர்கள் என்றும். இடது காதில் மச்சம் இருந்தால், விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் அர்த்தம்.


கழுத்தில் மச்சம் இருந்தால்


கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால், ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வார்கள் மற்றும் அவர்களின் வாழ்நாள் அதிகம்.


கையில் இருந்தால்


மச்சமானது வலது கையில் இருந்தால், எதையும் தைரியமாக கையாள்வதோடு, அனைவரையும் மதிப்பார்கள். அதுவே இடது கையில் மச்சம் இருந்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தம்.


மூக்கில் மச்சம் இருந்தால்...


மூக்கில் மச்சம் இருப்பவர்கள், வாழ்க்கையில் நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள்.


மச்சம் உள்ளங்கையில் இருந்தால்


வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களுக்கு, கையில் பணம் வந்து கொண்டே இருக்கும். அதுவே இடது உள்ளங்கையில் இருந்தால், அதிகப்படியான செலவை செய்வார்கள்.


கால்களில் இருந்தால்


கால்களில் மச்சம் இருந்தால், நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள்


புருவங்களுக்கு இடையே இருந்தால்


புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.


இடுப்பில் மச்சம் இருந்தால்


இடுப்பில் மச்சம் உள்ளவர்கள், அனைத்து செல்வங்களுடன், சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.


முதுகில் மச்சம் இருந்தால்


முதுகு பகுயில் மச்சம் இருப்பவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழ்வார்கள் மற்றும் மக்கள் உங்கள் பின்புறத்தில் கெட்டவிதமாக பேசுவார்கள்.


தொப்புள்


தொப்புளில் மச்சம் இருப்பவர்கள், அந்த விசயத்தில் (இரவு வாழ்க்கை) விஷயத்தில் வல்லவர்களாகவும், அதிகப்படியான குழந்தைகளை பெற்று வாழ்வார்கள்.


இடது தோள்பட்டை


இடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அதிகமாக தயக்கப்படுவதோடு, கோழையாக இருப்பார்கள்.


வலது தோள்பட்டை மச்சமானது


வலது தோள்பட்டையில் இருந்தால், தைரியமிக்கவராகவும், திறமை உள்ளவராகவும் இருப்பார்கள்.