Wednesday, August 13, 2014

நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?

நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?
+++++++++++++++++++++++++++++++++
நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.
பாலின் வகைகள் : பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.
பசும்புல்லை தீனியாக கொள்ளும் மாட்டின் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பயறு சாப்பிடும் மாட்டின் பால் மந்த குணம் கொண்டது. குழந்தைகளுக்கு ஆகாது.
பாலின் தன்மைகள் : வெண்மை நிற பசுவின் பால் பித்தத்தையும், செம்மை நிற பசுவின் பால் வாதத்தையும், கருமை நிற பசுவின் பால் கபத்தையும் நீக்கும். காராம்பசுவின் பால் கண்நோய் மற்றும் மற்ற பாலின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். எருமைப்பால் புத்தி தெளிவின்மையை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும். வெள்ளாட்டுப்பால் ஆஸ்துமா, வாத துன்பங்களை குறைக்கும். சீக்கிரம் செரிக்கும். நல்ல பசி உண்டாக்கும். செம்மறி ஆட்டுப்பால் ஆகாது. இதனை குடித்தால் வயிறு உப்புசம் ஆகும். மேல் சுவாசம் அதிகமாகும். குதிரைப்பால் விந்து பெருக்கத்தையும், புணர்ச்சியில் வன்மையும் உண்டாக்கும். யானைப்பால் வாதம் நீக்கும், மிகுந்த வன்மை உண்டாக்கும். தேக அழகு கூடும். எந்த பாலாக இருந்தாலும் கறந்து இரண்டரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அல்லது நன்கு காய்ச்சி அருந்த வேண்டும்.
பால் காய்ச்சும் முறை : காய்ச்சும் போது, வெள்ளாட்டுப்பால், பசும் பாலுக்கு 8ல் ஒரு பங்கு தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும். எருமை பால், செம்மறி ஆட்டுப்பாலுக்கு சரிபங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்ச்சிய பாலுடன் இனிப்பு, கார்ப்பு சுவை சேர்த்து அருந்தலாம். நல்ல நிலையில் உள்ள போது, இனிப்பு சுவையுடைய பனங்கற்கண்டை சேர்த்தும், நோயுற்ற நிலையில் இருக்கும் போது, கார்ப்பு சுவையுடைய மிளகு, திப்பிலி சேர்த்தும் அருந்தலாம்.
பாலில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், தாரா நோய், அரணை நோய் உள்ள மாட்டின் பாலை குடிக்க கூடாது. ரோட்டில் சுற்றித்திரியும் மாட்டின் பாலை குடித்தால் காசநோய் பாதிப்பு ஏற்படும். அசுத்தமான பாத்திரங்களில் பால் வாங்குவதாலும், மாசுபட்ட குடிநீரை அதில் சேர்த்து அருந்துவதாலும், சுரம், தொண்டைப்புண், பேதி உண்டாகும்.
வெண்ணெய் : பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது. 100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும். வரவிடாமல் தடுக்கும்.
வெண்ணெய் பயன் படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது. தோலின் நிறத்தையும், தன்மையையும் மேம்படுத்துகிறது. மூலநோயை குணப்படுத்துகிறது. வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது. இந்த நன்மைகள் எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்படும் வெண்ணெய் மூலம் கிடைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது.
நெய் : வெண்ணெய்யை உருக்கி செய்யப் படுவது நெய். இதனை நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,” என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க வைப்பது என்று பொருள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும், அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த மருத்துவம்
கூறுகிறது. இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம், எனக்கூறுகிறது. நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும் இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின் நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம் வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய், வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது. எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு முறை கூறுகிறது. இதையே நாமும் பின்பற்றி நல்ல முறையில் வாழ்வோம்.
நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?
+++++++++++++++++++++++++++++++++

நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.

பாலின் வகைகள் : பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.

பசும்புல்லை தீனியாக கொள்ளும் மாட்டின் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பயறு சாப்பிடும் மாட்டின் பால் மந்த குணம் கொண்டது. குழந்தைகளுக்கு ஆகாது.

பாலின் தன்மைகள் : வெண்மை நிற பசுவின் பால் பித்தத்தையும், செம்மை நிற பசுவின் பால் வாதத்தையும், கருமை நிற பசுவின் பால் கபத்தையும் நீக்கும். காராம்பசுவின் பால் கண்நோய் மற்றும் மற்ற பாலின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். எருமைப்பால் புத்தி தெளிவின்மையை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும். வெள்ளாட்டுப்பால் ஆஸ்துமா, வாத துன்பங்களை குறைக்கும். சீக்கிரம் செரிக்கும். நல்ல பசி உண்டாக்கும். செம்மறி ஆட்டுப்பால் ஆகாது. இதனை குடித்தால் வயிறு உப்புசம் ஆகும். மேல் சுவாசம் அதிகமாகும். குதிரைப்பால் விந்து பெருக்கத்தையும், புணர்ச்சியில் வன்மையும் உண்டாக்கும். யானைப்பால் வாதம் நீக்கும், மிகுந்த வன்மை உண்டாக்கும். தேக அழகு கூடும். எந்த பாலாக இருந்தாலும் கறந்து இரண்டரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அல்லது நன்கு காய்ச்சி அருந்த வேண்டும்.

பால் காய்ச்சும் முறை : காய்ச்சும் போது, வெள்ளாட்டுப்பால், பசும் பாலுக்கு 8ல் ஒரு பங்கு தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும். எருமை பால், செம்மறி ஆட்டுப்பாலுக்கு சரிபங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்ச்சிய பாலுடன் இனிப்பு, கார்ப்பு சுவை சேர்த்து அருந்தலாம். நல்ல நிலையில் உள்ள போது, இனிப்பு சுவையுடைய பனங்கற்கண்டை சேர்த்தும், நோயுற்ற நிலையில் இருக்கும் போது, கார்ப்பு சுவையுடைய மிளகு, திப்பிலி சேர்த்தும் அருந்தலாம்.

பாலில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், தாரா நோய், அரணை நோய் உள்ள மாட்டின் பாலை குடிக்க கூடாது. ரோட்டில் சுற்றித்திரியும் மாட்டின் பாலை குடித்தால் காசநோய் பாதிப்பு ஏற்படும். அசுத்தமான பாத்திரங்களில் பால் வாங்குவதாலும், மாசுபட்ட குடிநீரை அதில் சேர்த்து அருந்துவதாலும், சுரம், தொண்டைப்புண், பேதி உண்டாகும்.

வெண்ணெய் : பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது. 100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும். வரவிடாமல் தடுக்கும்.

வெண்ணெய் பயன் படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது. தோலின் நிறத்தையும், தன்மையையும் மேம்படுத்துகிறது. மூலநோயை குணப்படுத்துகிறது. வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது. இந்த நன்மைகள் எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்படும் வெண்ணெய் மூலம் கிடைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது.

நெய் : வெண்ணெய்யை உருக்கி செய்யப் படுவது நெய். இதனை நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,” என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க வைப்பது என்று பொருள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும், அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த மருத்துவம்

கூறுகிறது. இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம், எனக்கூறுகிறது. நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும் இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின் நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம் வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.

வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய், வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது. எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு முறை கூறுகிறது. இதையே நாமும் பின்பற்றி நல்ல முறையில் வாழ்வோம்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..! 
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! 
+++++++++++++++++++++++++++++++
பொது நலம் கருதி வெளியிடுவோர் :-

உங்கள் கடலூர் அரங்கநாதன்...

https://www.facebook.com/pages/இயற்கை-மருத்துவம்/718993441529451?sk=timeline

https://www.facebook.com/arangu.nathan

No comments:

Post a Comment